Our Feeds


Thursday, September 1, 2022

ShortTalk

BREAKING: நாளை (02) நாடு திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ?



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தாய்லாந்திலிருந்து நாளைய தினம் (செப். – 02) நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கோட்டாபய ராஜபக்ஸ, நாடு திரும்பும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சிறப்புரிமைகளும் வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸ கடந்த மாதம் 24ம் திகதி நாடு திரும்பவிருந்ததாக அவரது உறவினரும், ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார்.

எனினும், சில காரணங்களினால் அவரது பயணம் பிற்போடப்பட்டதாகவும், செப்டம்பர் மாதத்தில் அவர் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


ட்ரூ சிலோன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »